யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், யாழ். புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை காமாட்சிப்பிள்ளை அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னர் சீனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாசினி, தயாநிதி(முன்னாள் இலங்கை வங்கி ஊழியர்- ஊர்காவற்துறை), ஜெகதீசன்(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி(லண்டன்), நளினி(லண்டன்), பவானி(ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், ஆறுமுகம் மற்றும் செல்லமுத்து, செல்லம்மா, சிவமணி(கிளி), திருக்கேசுவரி, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகராணி(பிரான்ஸ்), யோகராசா(லண்டன்), அருந்தவம்(லண்டன்), சுகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிஷா, ஜெனனி, கோகுலன், யாகவன், பிரணவன், பிரணவி, சிவசுதன், ரிஷி, சிபி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: இல. 109, ஸ்டேசன் வீதி, யாழ்ப்பாணம். |