திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரகாந்தி கோபாலன் அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி கனகசபை(ஏழாலை மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன்(லண்டன்), சபேசன்(கொழும்பு), நிறோசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தகுமார்(வவுனியா), மங்களாகாந்தி(சவூதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்கயர்க்கரசி(மங்கை), குமுதினி, சப்றீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷீபா, நேத்தன், றீசோசன், கெசேனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 15-02-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் 16-02-2017 வியாழக்கிழமை அன்று St Stephen Cemetery, Dockyard Road, Trincomalee மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: இல. 275, அன்புவழிபுரம், திருகோணமலை.